Naanaga Naan Illai Lyrics | Thoongathe Thambi Thoongathe |

Naanaga Naan Illai song lyrics from Thoongathe Thambi Thoongathe (1983). Music composed by Ilayaraja and the song is sung by SP Balasubramaniam. The beautiful lyrics are written Vaali

LYRICS

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

கீழ்வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

மணிமாளிகை மாடங்களும்
மலர் சூடிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோவில் தொழும் தெய்வம் இங்கு
நீயின்றி நான் காண வேறில்லை

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

Share with:


Be the first to comment on "Naanaga Naan Illai Lyrics | Thoongathe Thambi Thoongathe |"

Leave a comment

Your email address will not be published.