Adi Aathaadi Lyrics | Kadalora Kavithaigal | Ilayaraja | Vairamuthu

Ilayaraja Song Lyrics Collection Hit Songs

Lyrics of Adi Aathaadi song from Kadalora Kavithaigal movie. The music composed by Ilaiyaraja. Lyrics by Vairamuthu. Ilaiyaraaja and S Janaki sung the song. Adi Aathadi is set in the carnatic raga known as Shivaranjani.

LYRICS

அடி ஆத்தாடி
அடி ஆத்தாடி இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அலை வந்து
மனசில அடிக்குது அதுதானா

உயிரோடு
உறவாடும்
ஒருகோடி
ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்

அடி ஆத்தாடி இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா
அடி அம்மாடி

மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ
இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பெண்ணே -என்னை
என்ன செய்ய உத்தேசம்
வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே

அடி ஆத்தாடி
இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது
சரிதானா
அடி அம்மாடி
ஒரு அலை வந்து மனசில அடிக்குது
அது தானா

உயிரோடு
உறவாடும்
ஒருகோடி
ஆனந்தம்
இவன் மேகம் ஆக… யாரோ காரணம்

Share with:


Be the first to comment on "Adi Aathaadi Lyrics | Kadalora Kavithaigal | Ilayaraja | Vairamuthu"

Leave a comment

Your email address will not be published.