Maraththa Vechchavan Lyrics | Panakkaran | Ilayaraja | Rajinikanth

Lyrics of Maraththa vechchavan song from Rajinikanth’s Panakkaran written, composed and sung by Ilayaraja. The super hit song with philosophical lines created an unforgettable impact on audience at the time of its release

LYRICS IN TAMIL

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்
ஏ மனமே கலங்காதே
வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே
படைத்தவன் எவனோ
அவனே சுமப்பான்
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்

படைத்தவனின் துணையிருக்க
அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க
வருத்தமிங்கே உனக்கெதற்கு

உன்னை நல்ல ஆளாக்க
உத்தமனைப் போலாக்க
எண்ணியவன் யாரென்று
கண்டுகொள்ள யாருண்டு
ஊரெல்லாம் உந்தன் பேரை
போற்றும் நாள் வரும்
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்

உதவியின்றி தவிப்பவர்க்கு
உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு
உணவு தர நீ படிப்பாய்
உதவியின்றி தவிப்பவர்க்கு
உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு
உணவு தர நீ படிப்பாய்

புத்தியுள்ள உனக்கெல்லாம்
புத்தகத்துப் படிப்பென்ன
சக்தியுள்ள உனக்கெல்லாம்
சத்தியத்தில் தவிப்பென்ன
காத்து இருப்பது எத்தனை பேரோ
உன்னிடம் தோற்பதற்கு
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்

ஏ மனமே கலங்காதே
வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே
படைத்தவன் எவனோ
அவனே சுமப்பான்
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்

Share with:


Be the first to comment on "Maraththa Vechchavan Lyrics | Panakkaran | Ilayaraja | Rajinikanth"

Leave a comment

Your email address will not be published.