Nadanthaal Irandadi Lyrics | Chemparuthi | Ilayaraja

Lyrics of Nadanthaal Irandadi song from Chemparuthi with the mesmerizing voice of SP Balasubramaniam. Music by Ilayaraja. Nadanthaal irandadi irunthaal naangadi

LYRICS

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒண்ணும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே – உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கறமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் – அது
அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான்
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே – உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம் – அடி
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

Share with:


Be the first to comment on "Nadanthaal Irandadi Lyrics | Chemparuthi | Ilayaraja"

Leave a comment

Your email address will not be published.