Ondre Kulamendru Paaduvom Lyrics | Pallandu Vaazhga

KJ Yesudas Singing Photo

Lyrics of Ondre Kulamendru from Pallandu Vaazhga released in 1975, directed by K. Shankar and music by K. V. Mahadevan. The song is written by Pulamaipithan and sung by KJ Yesudas.

LYRICS

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய் வருத்த கூலி தரும்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டும் என்று
வணங்குவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டும் என்று
வணங்குவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்

கடவுளிலே கருணைதன்னை காணலாம்
அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்
கடவுளிலே கருணைதனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான்
எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும்
கொள்கை தீபம் ஏற்றினார்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும்
கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம்
சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டும் என்று
வணங்குவோம்

ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்

Share with:


Be the first to comment on "Ondre Kulamendru Paaduvom Lyrics | Pallandu Vaazhga"

Leave a comment

Your email address will not be published.