Kadha Kelu Kadha Kelu Lyrics | Ilayaraja

Kadha Kelu Kadha Kelu song from Kamal Haasan’s cult classic Michael Madana Kama Rajan directed by Singeetam Srinivasa Rao. The song lyrics is written by Panju Arunachalam and sung by Ilayaraja himself.

LYRICS

ஆ கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு

சீமானின் காதலுக்கு ஆளான பெண்ணொருத்தி
கல்யாணம் ஆகும் முன்னே தன்னையே தந்தால்
சீமானின் சொதுக்கெல்லாம் வாரிசு இல்லையென்று
பங்கிற்கு காத்திருந்த தம்பிக்கு அதிர்ச்சி
அண்ணனின் உறவை அழித்திட துணிந்தான்
சகுனியை போல் ஒரு சதி செய்தான்
உண்மையை அறிந்த கன்னியும் உடனே
கருவினை காத்திட துணிந்தாளே
வஞ்சகர் கண்களில் மண்ணையும் தூவி
விரைந்தவள் அவள் தான் அபையம் தேடி
ஆதரவின்றி அலைந்தே திரிந்தே
கொடிபோல் துவண்டால் தனியே கிடந்தால்
ஒரு நல்ல மகராசி வந்தாலே சமயத்தில்
உதவிக்கு தாய் போல் துணையாய் நின்றால்

கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு

பிள்ளையே இல்லையென்று ஏங்குவோர் இங்கிருக்க
பிள்ளையோ பிள்ளை என்று பிறந்தது நாங்கு
ஒன்றுக்கு நாலென்று சொத்துக்கு பங்கு கொள்ள
வாரிசு கண்ட தம்பி பலியிட துணிந்தான்
சொல்லிட நெஞ்சம் பதருது இங்கே
பாலகர் நிலை இனி என்னாகும்
பணத்துக்கு விழுந்த பாதகன் செயலால்
அன்னையின் சதையும் என்னாகும்
மரணத்தின் கொடுமையை அரியா குழந்தையின்
மலர் போல் சிரிப்பில் அவன் மனம் மாற
இறைவனின் அருளால் நல்லது நடக்க
பிரிந்தன குழந்தைகள் திசைக்கென ஒன்றை
தந்தைக்கு தெரியாது தன்பிள்ளை தன் கையில்
விதி போடும் கோலங்கள் யாருக்கும் தெரியாது

கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு

Share with:


Be the first to comment on "Kadha Kelu Kadha Kelu Lyrics | Ilayaraja"

Leave a comment

Your email address will not be published.