Raathiriyil Poothirukum Lyrics | Thanga Magan | Ilayaraja | SP Balasubramaniam and S Janaki

Raathiriyil Poothirukum song lyrcis from Thanga Magan (1983) directed by A. Jagannathan featuring Rajinikanth and Poornima. Music by Ilayaraja. Lyrics by Pulamaipithan. Singers: SP Balasubramaniam and S Janaki

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் போதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழை இல்லை நீர் தெளித்து போட்டி என் கண்ணே
வாழை இல்லை நீர் தெளித்து போட்டி என் கண்ணே
நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

[tweetthis]Raathiriyil Poothirukum Lyrics | Thanga Magan | Ilayaraja | SP Balasubramaniam and S Janaki[/tweetthis]

Share with:


Be the first to comment on "Raathiriyil Poothirukum Lyrics | Thanga Magan | Ilayaraja | SP Balasubramaniam and S Janaki"

Leave a comment

Your email address will not be published.